15 மில்லியன் மக்கள் உயிரிழப்பு உண்மையை மறைக்கும் உலக நாடுகள்?
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 15 மில்லியன் மக்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
இது தற்போது வெளியிடப்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கையில் இருந்து மூன்று மடங்கு அதிகமான எண்ணிக்கை என கூறப்படுகிறது. மேலும், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் கொரோனா தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்து வெளியிட்டுள்ளதால்,
பதிவுசெய்யப்பட்ட தரவுகளுக்கும் உண்மையான புள்ளிவிவரங்களுக்கும் இடையிலான வேறுபாடு வெளிவராமல் போனதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ரஷ்யாவின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையானது தனது குடிமக்களைப் பொறுத்துக் கொள்ளக் கூடிய வகையில் பாதுகாத்திருப்பதாகக் கூறினாலும், மொத்த இறப்பு எண்ணிக்கையில் அது உண்மையில் கொரோனா பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல், இந்தியாவின் இறப்பு எண்ணிக்கையும் உண்மையில் பல ஆயிரக்கணக்கானது என்பதை விட மில்லியன் கணக்கில் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி, மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் மற்றும் பெரும்பாலான தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் இறக்கும் பலர் ஒருபோதும் உரிய சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை, அதனால் இறப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
நிகரகுவாவில், மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை அதன் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையான 200 விட 9,000 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.
42 நாடுகளில் 9,636 இறப்புகளுடன் சீனா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஆனால் உண்மையில் இது 130,000 முதல் 1.5 மில்லியன் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2019ல் சீனாவில் முதன்முறையாக பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து, இதுவரை மொத்தம் 4,570,610 பேர் இறக்க காரணமாக அமைந்துள்ளது