சிறையிலிருந்து வெளியேறினார் ஞானசார தேரர்!
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த ஞானசார தேரர் இன்று மாலை வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொதுமன்னிப்பில் அவர் நேற்றே விடுவிக்கப்பட்டாலும் ஆவணங்கள் சரிப்படுத்தப்பட்ட பின்னர் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டார்
அவரை வரவேற்க வெலிக்கடை சிறைச்சாலை முன் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். பிக்குமாரும் வந்திருந்தனர்.