வடமேல் மாகாணத்திலும் கம்பஹா பொலிஸ் பிரிவிலும் இன்றிரவு ஊரடங்கு!
வன்முறைகள் அரங்கேறி இருந்த வடமேல் மாகாணத்துக்கும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் இன்றிரவு 7 மணியிலிருந்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாளை அதிகாலை 4 மணி வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு இன்றிரவு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.