பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரிக்கு கொரோனா !

பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவின் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 7 பேருக்கு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி, பிரதான பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வேலை செய்யவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *