மொனராகலையில் மௌலவி கைது!
மொனராகலை ஜும்மா மௌலவி சந்தேகத்தின் பேரில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்படும் போது, இவரிடமிருந்து ஆவணங்கள் சிலவற்றையும், ஒரு இலட்சத்து இருபத்தொராயிரத்து அறுநூறு ரூபா பணமும் மீட்டதாக மொனராகலைப் பொலிசார் தெரிவித்தனர்.
மேலும், ‘கெப்’ வாகனமொன்றும் பொலிஸாரினால் மீட்டகப்பட்டது.
மொனராகலைப் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(பதுளை நிருபர் – எம். செல்வராஜா)