மட்டக்களப்பில் தாக்குதல் நடத்துவதற்கு முன் மசூதிக்குச் சென்ற ஐ.எஸ். தீவிரவாதி!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியின் கடைசி நிமிடப் பிரத்தியேக வீடியோவை பிரபல ஆங்கில ஊடகமான ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தற்கொலைக் குடுத்த தாக்குதலினால் பலர் பலியாகியுள்ளனர்.

நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தால் ஏராளமானோர் தங்கள் உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய திவீரவாதி மொஹமட் அஷாரின் (வயது 34) கடைசி நிமிட சி.சி.டி.வி. வீடியோ காட்சியை பிரபல ஆங்கில ஊடகமான ஸ்கை நியூஸ் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது.

அதில் அஷார் தாக்குதல் நடத்திய கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 02.10 மணிக்கு மட்டக்களப்பில் இருக்கும் Jami Us-Salam மசூதிக்கு இரண்டு பைகளுடன் வருகின்றார். அதன் பின் அங்கு சுமார் இரண்டு, மூன்று மணி நேரம் காத்திருக்கும் அவர் கையில் தான் வைத்திருக்கும் மொபைல் போனை ஏதோ செய்து கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு 4.42 மணியளவில் ஏதோ பொலிஸாரின் வாகனம் வருகின்றது. அங்கு பொலிஸார் பார்க்கும்போது அவர் இல்லை. இதைத் தொடர்ந்து மசூதி திறந்தவுடன் 5.42 மணிக்கு அஷார் உள்ளே செல்கிறார்.

அதன் பின் உள்ளே சென்று அங்கிருக்கும் ஒருவரிடம் பேசிவிட்டு, உள்ளே இருப்பவர்களுடன் சேர்ந்து தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென்று எழுந்து செல்கிறார். இதைத் தொடர்ந்து 9.33 மணிக்கு வெளியில் சென்று தாக்குதலை நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *