2 கோடி ரூபா பெறுமதியான அபின் வடமராட்சியில் மீட்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் அபின் எனும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது என்று காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். இதன் பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிகம் என்று கூறப்படுகின்றது.

தொண்டமானாறு கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்தே அபின் மீட்கப்பட்டுள்ளது.

ஒன்றரைக் கிலோ நிறையுடைய அபின் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கி த்த இரகசியத் தகவலை அடுத்தே அபின் மேலதிக விசாரணைக்காகவும், நீதிமன்ற நடவடிக்கைக்காகவும் வடமராட்சிப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *