ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு முற்றாகத் தோற்கடிப்பு! – சிரியாப் படைகள் கூறுகின்றன

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் படைகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டன என்று அமெரிக்கா ஆதரவு பெற்ற அந்நாட்டுப் படைகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து சிரிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது,

”ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எதிரான இறுதிப் பகுதியும் மீட்கப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கில் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். மீதமுள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக சண்டை தொடரும்” – என்றார்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. இதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரச கூட்டுப் படைகளால் படிப்படியாக மீட்கப்பட்டு வந்தன.

இந்த உள்நாட்டுப் போர் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *