10 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் செம்மணியில் மூவர் சிக்கினர்!

செம்மணிப் பகுதியில் 10 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் 3 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

10 கிலோ கேரளாக் கஞ்சாவை கைமாற்றுவதற்கு வருகை தந்தபோதே, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட 3 பேரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *