கஞ்சிபான இம்ரானின் சகாவான ‘ஜீபும்பா’ கைது!
டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள கஞ்சிப்பான இம்ரானின் வலது கையாக செயற்பட்ட “ஜீபும்பா” என்றழைக்கப்படும் மொஹமட் சியாம் என்பவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளையில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே விசேட அதிரடிப் படையினரால் அவர் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டியப் பகுதிகளில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்களுடன் இவர் தொடர்புபட்டுள்ளார் என்றும்,
கஞ்சிபான இம்ரானின் கட்டளையை நிறைவேற்றும் நபராகவே ‘ஜீபும்பா’ செயற்பட்டுவந்துள்ளார் என்றும் பொலிஸ் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.