அரசின் தவறான கொள்கையால் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது!

அரசாங்கம் கண்மூடித்தனமாக பணத்தை அச்சிட்டு நடைமுறைப்படுத்தும் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் நாட்டில் அதிக பணவீக்கம் ஏற்படுவதுடன் மக்களுக்கு உணவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

இப்படி காலவரையின்றி பணத்தை அச்சடித்து பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கிய நாடுகள் பல உள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியில் இதுதான் நிலைமை. அந்தப் போருக்குப் பிறகு ஜெர்மனி  பெரும் இழப்பீடு கொடுக்க வேண்டியிருந்தது.

அதற்காக, அவர்கள் தங்கள் நாட்டில் பணத்தினை காலவரையின்றி அச்சடித்தனர். இதன் விளைவாக, ஜெர்மனியில் பெரிய பணவீக்கம் வெடித்தது.

இத்தகைய பணவீக்கத்தை உருவாக்கிய நம் நாட்டிற்கு மிக நெருக்கமான நாடு சிம்பாப்வே. 2007 இல், ஜனாதிபதி ராபர்ட் முகாபே அனைத்து வெளிநாட்டு தோட்டங்களையும் கைப்பற்ற முடிவு செய்தார். சிம்பாப்வேயில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் டொலர்களை வெளிநாட்டவர்களுக்கு செலுத்த தேவையான பணத்தைக் கண்டறியும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்பிறகு, அனைத்து வெளிநாட்டவர்களும் தங்களுடைய டொலர் கையிருப்பை எடுத்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, சிம்பாப்வேயில் பெரும் பணவீக்கம் உருவாகிறது.

இறுதியில் அவர்கள் $100 பில்லியன் பணத்தை அச்சிட்டனர், ஆனால் அந்த நோட்டின் மூலம் நாட்டு மக்கள் மூன்று முட்டைகளை மட்டுமே வாங்க முடியும். பொருட்களின் விலையில் இத்தகைய அதிகரிப்பு இருந்தது. அத்தகைய நிலைதான் இந்த நாட்டிலும் நடக்கிறது என குறிப்பிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *