வாட்டி வதைக்கும் வெப்பம் மேவரை தொடரும்!

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பத்துடனான வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே மாதம் வரையில் வெப்பத்துடனான வானிலை நீடிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எனவே, அதிகளவு நீரைப்பருகுமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர். பகல்வேளைகளில் பொதுவெளியில் அவதானத்துடன் பயணிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *