நாட்டில் விபத்துகள் அதிகரிப்பு! மேலும் இருவர் பரிதாபச் சாவு!!
நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அநுராதபுரம் – புத்தளம் வீதியின் நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் நொச்சியாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நொச்சியாகம பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கரண்டுபன சந்தியில் வான் ஒன்றுடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.