இலங்கை வருகிறார் நோர்வே அமைச்சர்!
நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியான் ஹேகன் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளார்.
இதன்போது அவர், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.