மைத்திரி – ரணில் – மஹிந்தவுடன் இந்தியத் தூதுவர் அவசர சந்திப்பு!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை நேற்று தனித்தனியாக அவசரமாகச் சந்தித்தார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக விளக்கும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

இந்தியாவுக்கும் பாகிங்தானுக்கும் இடையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதே தமது நோக்கம் எனவும் மூவரிடமும் இந்தியத் தூதுவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *