மட்டக்களப்பு , கொழும்பு – விமான சேவை ஆரம்பம்!

மட்டக்களப்பு, வவுனதீவு  விமான நிலையத்தில்-  செரண்டிப் ஏயார்வைஸ் நிறுவனம் தனது இரண்டாவது உள்நாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்தது.

குறித்த விமான சேவை கொழும்பு – மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் அமீர் அலி , மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள், செரன்டிப் ஏயார்வைஸ் நிறுவன தலைவர் உட்பட பலரும் கலந்து நிகழ்வில் கொண்டார்கள்.
இந்த விமான சேவை திங்கள் ,புதன்,வெள்ளி ஆகிய தினங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *