‘தேசிய அரசு’ தொடர்பில் சபையில் நாளை விவாதம்!
தேசிய அரசு அமைப்பது தொடர்பான யோசனையை நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.