மாகந்துர மதுஷ் தனி சிறையில் அடைப்பு ! அங்கொட லொக்காவுக்கும் வலை!!

டுபாயில் நேற்று கைதுசெய்யப்பட்ட பாதாளகோஷ்டி தலைவர் மாகந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் தனித்தனி சிறை அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மதுஷின் மகனின்  பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்ளவந்து,  இறுதி நேரத்தில் தப்பிச் சென்றதாக சொல்லப்படும் அங்கொட லொக்காவை தேடி அந்நாட்டு பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

மதுஷின் தொலைபேசிகள் இரண்டை கைப்பற்றிய டுபாய் பொலிஸார் , அவற்றுக்கு வந்துசென்ற அழைப்புக்களின் பட்டியலை எடுத்தனர்.

இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னணி வர்த்தகர்கள் பலருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டுள்ள விபரம் வெளிவந்துள்ளதால்

அந்த மேலதிக விசாரணைகளை இலங்கை பாதுகாப்புத் தரப்பிடம் ஒப்படைக்க அந்நாட்டு பொலிஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *