‘சேனா’வுக்கு முடிவுகட்ட ஹில்புல்லா களத்தில்!
ரிதிதென்ன பகுதிக்கு இன்று (02) விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ், அப்பிரதேச விவசாயிகளை சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
மேலும், கிழக்கு ஆளுநர் , சோளம் பயிரடப்பட்ட விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயத்தில் புதிய சவாலாக ஏற்பட்டுள்ள “சேனா” என்கின்ற படைப்புழு வகை தொடர்பாக நேரில் ஆராய்ந்தனர்.
இது தொடர்பாக எதிர்வரும் வாரம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்களோடு கலந்துரையாடி தீர்வை பெற்றுதரவுள்ளதாக அப்பிரதேச விவசாயிகளிடம் உறுதியளித்தார்.
இந் சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர் தாஹிரும் கலந்து கொண்டார்.