திருகோணமலையில் வெடிபொருட்கள் மீட்பு!
திருகோணமலை – ஏரக்கண்டி கடற்பகுதியிலிருந்து வெடிபொருட்கள் சில கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையின் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
விசேட ரோந்து நடவடிக்கையின்போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள வெடிபொருட்களை நீதிமன்றத்தின் அனுமதியுடன் செயலிழக்க வைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.