விக்னேஸ்வரனையும் சந்தித்தார் ராகவன்!
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று (16) சந்தித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் இந்தச் சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது என்று ஆளுநரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.