பின் கதவால் நுழைந்தோரை முன் கதவால் அனுப்பினோம்! – சஜித் ‘பளீர்’

“பின் கதவால் அதிகாரத்துக்கு வந்தவர்களை 50 நாட்களில் முன் கதவால் வெளியேற்றியுள்ளோம்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பு, காலிமுகத்திடலில் நேற்று மாலை நடைபெற்ற ‘ஒக்ரோபர் 26 அரசியல் சூழ்ச்சி’ வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

“அண்மையில் நாடாளுமன்றில் அரங்கேறிய கொடூரமான நடவடிக்கைகளுக்குத் தந்தையும் மகனும் கட்டளையிடுவது காணொளி ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *