நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு சமாதி! – நாடாளுமன்றில் இன்று விவாதம்
நாட்டில் 50 நாட்களுக்கு மேலாக நீடித்துவரும் அரசியல் குழப்பத்துக்கு இன்னும் முழுமையாகத் தீர்வு காணப்படாத நிலையில், நாடாளுமன்றம் இன்று மதியம் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
அமைச்சரவை இன்னமும் நியமிக்கப்படாததால், நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மாத்திரமே அவருக்காக குறித்தொகுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்வார். ஏனைய உறுப்பினர்கள், ஆட்சிமாற்றத்துக்கு முன்னர் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனக் கிரமப்படி அமர்வார்கள்.
அதேவேளை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கக் கோரி சபையில் இன்று விவாதம் நடைபெறும். இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை ஜே.வி.பி. கொண்டுவரவுள்ளது.
அத்துடன், இன்றைய அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.