பேலியகொடையில் மனிதத் தலை: தொடர்கிறது பொலிஸ் விசாரணை!
பேலியகொடைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுகெமுனு வீதியில் உள்ள தொழிற்சாலையொன்றின் வளாகத்திலிருந்து மனிதத் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசரப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய இந்தத் தலை நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தத் தலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த தொடர் விசாரணைகளை பேலியகொடைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.