அரசாங்கம் 6.9 மில்லியன் மக்களின் ஆணையை மீறிவிட்டதாக கம்மன்பில தெரிவிப்பு!

மக்களின் ஆணையை அரசாங்கம் மீறிவிட்டது- நாங்கள் அரசாங்கத்திற்குள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்று உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் 6.9 மில்லியன் மக்களின்  ஆணையை  மீறிவிட்டதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதயகம்மன்பில அரசாங்கத்திற்குள் போராட்டமொன்றினை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிலர் அரசாங்கத்திற்குள் உள்மோதல் காணப்படுகின்றதா என கேள்வி எழுப்புகின்றனர் என தெரிவித்துள்ள அமைச்சர் நாங்கள் அரசாங்கத்திற்குள் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம் என்பது உண்மை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த போராட்டம் அரசாங்கத்தை அழிப்பதற்கானது இல்லை அதனை  பாதுகாப்பதற்கானது என தெரிவித்துள்ள  அமைச்சர் மக்கள் வழங்கிய ஆணைகுறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

20வது திருத்தம் மக்களின் ஆணையை மீறுவதாக காணப்படுகின்றது. என தெரிவித்துள்ள அமைச்சர் நாங்கள் மக்களின் ஆணையை பின்பற்றியிருந்தால் 20வது திருத்தம் சாத்தியமாகியிராது எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆணையை நாங்கள் மதிப்பது என்றால் எங்களிற்கு வாக்களித்த 6.9 மில்லியன் மக்களின் ஆணையை மதிக்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *