‘குழந்தை அரசியலை’ மீண்டும் கையிலெடுத்தார் மஹிந்த!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி  முடிவுக்குகொண்டுவரப்பட்டதையடுத்து – அதற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய மஹிந்த ராஜபக்ச சிங்கள மக்கள் மத்தியில் வெற்றி நாயகனாக வலம்வந்தார்.

அதுமட்டுமல்ல சிங்கள, பௌத்த கோட்பாடுகளை முன்னிலைப்படுத்தி அரசியல் தீர்மானங்களை எடுத்ததால் அவரை ஒரு தரப்பு கடவுளாகக்கூட பார்த்தது. மேலும் சிலர் ‘அப்பச்சி’ ( அப்பா) என்று அழைத்து மகிழ்ந்தனர். இதனால்,  தெற்கு அரசியலில் மஹிந்தவின் ஆதிக்கம் கோலோச்சியது.

அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்கசெல்லும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவால் அதிஉச்ச பாதுகாப்பு வழங்கப்படும். அப்படி இருந்தும் மக்கள் மத்திக்குசென்று, குழந்தைகளை தூக்கி கொஞ்சி பேசும் மஹிந்தவின் அரசியல் அணுகுமுறையே அவரை, அரசியலில் உச்சம்தொட வைத்தது என்றும் கூறலாம்.

இதனால், 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற அனைத்துவிதமான தேர்தல்களிலும் மஹிந்த தலைமையிலான அணி வெற்றிவாகைசூடியது.

2014ஆம் ஆண்டுக்கு பிறகு மஹிந்தவின் செல்லாக்கு சரிய ஆரம்பித்தது. 2015 இல் ராஜபக்ச சாம்ராஜ்யம் சரிந்தது. தற்போது சூழ்ச்சிமூலம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மஹிந்த முயற்சியெடுத்தார். இதற்கு மைத்திரியும் கரம்கொடுத்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ‘குழந்தை அரசியலை’ மஹிந்த மீண்டும் கையில் எடுத்துள்ளார். கண்டி தலதாமாளிகைக்கு இன்று சென்றிருந்த மஹிந்த அங்கு வந்திருந்த மக்களுடன் கலந்துரையாடியதுடன், வழமைபோல் குழந்தைகளையும் தூக்கி கொஞ்சினார். மேலும் பல சிறார்கள் மஹிந்தவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *