மலையகத்தில் அடை மழை! மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகள் திறப்பு!!

மலையகத்தில் பல பகுதிகளிலும் அடைமழைபெய்துவருவதால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது. இந்நிலையில், மேல் கொத்மல நீர்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள், மக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


அத்துடன், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *