அமரர் தொண்டமானின் பூதவுடல் இன்று காலை ஹெலிகொப்படர் மூலம் கம்பளைக்கு எடுத்து வரப்பட்டது
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இறம்பொடை, வேவண்டன் இல்லத்தில் இன்று வைக்கப்படவுள்ளது.
கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடல் இன்று காலை ஹெலிகொப்படர் மூலம் கம்பளைக்கு எடுத்து வரப்பட்டது.
கம்பளையில் அஞ்சலி நிகழ்வு முடிவடைந்த பின்னர் புஸல்லாவை வழியாக பூதவுடல் தாங்கி பேழை வேவண்டன் எடுத்துச்செல்லப்படவுள்ளது.
வேவண்டனின் மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் நாளை (30) கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்துக்கு பூதலுடல் எடுத்துசெல்லப்படவுள்ளது.