அமெரிக்க தூதரக சேவைகள் இரத்து!
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமது சேவைகளை இரண்டு நாட்களுக்கு இரத்துச் செய்துள்ளது.
மிகுந்த எச்சரிக்கையுடன், தூதரகம் புதன்கிழமை பிற்பகல் சேவைகளையும் (அமெரிக்க குடிமக்கள் சேவைகள் மற்றும் என்ஐவி பாஸ்பேக்) மற்றும் வியாழக்கிழமையின் அனைத்து தூதரக சேவைகளையும் இரத்து செய்வதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஏற்படும் எந்தவொரு சிரமத்திற்கும் தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், மேலும் இரத்து செய்யப்பட்ட அனைத்து சந்திப்புகளையும் மீண்டும் திட்டமிடவுள்ளதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.