ஒரு வடை 800 ற்கு விற்ற உணவக உரிமையாளர் கைது
வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு வடை மற்றும் தேநீர் கொடுத்துவிட்டு ரூபா 800 வசூசூலித்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறையில் உள்ள உணவகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையிலேயே குறித்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.