ஸ்டம்ப்களை தெறிக்கவிட்ட இலங்கை வேகப்புயல்!
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பத்திரனா அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
விசாகப்பட்டணத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.
முதலில் துடுப்பாடிய டெல்லி அணி 10 ஓவர்களில் 100 ஓட்டங்கள் விக்கெட் இழப்பின்றி எட்டியது. ஆனால், அதன் பின்னர் டெல்லி அணியின் முக்கிய வீரர்களான மிட்செல் மார்ஷ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரின் ஸ்டம்புகளை பத்திரனா தெறிக்கவிட்டார்.
ஒரு கட்டத்தில் 250 ஓட்டங்கள் எட்டும் நிலையில் இருந்த டெல்லி அணி, 20 ஓவரில் 191 ஓட்டங்கள் எடுத்தது.
சிறப்பாக பந்துவீசிய இலங்கையின் பத்திரனா 31 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.