கடலுக்கடியில் கேபிள்கள் சேதம்! பாரிய இணையத்தடை!!

கடலுக்கடியில் கேபிள்கள் சேதமடைந்ததனையடுத்து மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் பெரும் இணையத்தடை ஏற்பட்டுள்ளது.

கடலுக்கடியில் உள்ள கேபிள் செயலிழப்புகள் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இணைய சேவை இல்லாமல் தவித்து வருகின்றன.

மார்ச் 14ஆம் திகதி அன்று, மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் பெரிய பகுதிகளும், கண்டத்தின் தெற்கில் உள்ள சில நாடுகளும் உலகப் பெருங்கடல்களுக்குக் கீழே இயங்கும் நான்கு இணைய கேபிள்களில் செயழிலப்பிற்குள்ளாகியதால் பாதிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியா, கோட் டி ஐவரி, லைபீரியா, கானா, புர்கினா பாசோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. மார்ச் 15 மதியம் வரை பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

கேபிள்களை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தனது வாடிக்கையாளர்களை எச்சரித்தது.

சேதத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மீன்பிடி கப்பல்கள் இயங்கக்கூடிய ஐவரி கோஸ்ட் அருகே ஆழமற்ற நீரில் கேபிள்கள் ஒடிந்தன என்று நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *