நெதன்யாஹூவின் அணுமுறைகளை கண்டித்துள்ள ஜோ பைடன்
காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலின் இந்த அணுகுமுறைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஸா விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கையாளும் விதம் குறித்து பைடன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ள ஜோ பைடன், பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த வியாழன் காங்கிரஸின் இரு அவைகளிலும் தனது வருடாந்த உரைக்குப் பின்னர், பைடன், செனட்டர் மைக்கேல் பென்னட், வெளிவிவகார செயலாளர் பிளிங்கன் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நெதன்யாஹூ மனிதாபிமான நெருக்கடியை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை
காஸாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி குறித்து இதன் போது செனட்டர் பென்னட் கவலை தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள பைடன்,காஸாவைப் பற்றி நெதன்யாஹூவிடம் ஏற்கனவே கூறியதாகவும் காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை தடுப்பதற்கு நெதன்யாஹூ போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு உதவுவதை விட மக்களை காயப்படுத்தும் உத்தரவுகளையே நெதன்யாஹூ அதிகமாக பிறப்பித்து வருகிறார். இஸ்ரேலை பாதுகாக்க நெதன்யாஹூவுக்கு உரிமை உள்ளது.
அதேநேரம் தான் எடுத்து வரும் நடவடிக்கைகளால், மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பைடன் கூறியுள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் தாக்குதல்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
அதேவேளை ஹமாஸ் பிடித்துச் சென்ற பணயக்தைகளில் 99 பேர் காஸாவில் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.