பழங்களின் வாசனை புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும்! ஆய்வில் தகவல்!
பழங்களைச் சாப்பிட்டால் சில நோய்கள் குணமாகிவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், பழங்களின் வாசனையானது புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதைத் தடுக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
புற்றுநோய் சிகிச்சையில் மருத்துவர்கள் Histone deacetylases (HDAC) பயன்படுத்துகின்றனர். புற்றுநோய் செல்கள், neurodegeneration (பார்கின்சன், அல்சைமர் போன்றவை) நோய்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் HDAC பயனுள்ளதாக இருக்கும்.
இந்நிலையில், நன்கு பழுத்த பழங்களின் வாசனையும் HDAC மாதிரியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகளின் சோதனைகள் தெரிவிக்கின்றன.
பழத்தின் வாசனையை சுவாசிப்பது மரபணு வெளிப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது புற்றுநோய் மற்றும் நரம்பியல் நோய்களுக்கான சிகிச்சையில் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இது தொடர்பாக இன்னும் பல பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றும், நீராவி மற்றும் நாற்றங்களை வெளிப்படுத்துவது போன்ற புதிய நடைமுறைகள் புற்றுநோய் செல்களை எந்த அளவிற்கு பாதிக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த சூழலில் எலிகள் மற்றும் விலங்குகள் மீது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மனிதர்களில் பல்வேறு உறுப்புகளை பாதிக்கும் புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சையில் இது முக்கியமானது என்று கூறப்படுகிறது.