முன்னாள் கடற்படைத் தளபதி ஐக்கிய மக்கள் சக்தியில்

முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியுமான தயா சந்தகிரி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

இலங்கை கடற்படையின் ஓய்வுபெற்ற 14வது கடற்படைத் தளபதியான  தயா சந்தகிரி  (VSV, USP rcds, MSc (DS), psc, FCMI), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து இன்று ஐக்கிய மக்கள் சக்தியில்  இணைந்தார்.

கடல் மற்றும் கடற்படைத் துறையில் அவருக்கு இருக்கும் அபார அறிவு மற்றும் அனுபவத்தின் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கடல் மற்றும் கடற்படைக் கொள்கைகள் பற்றிய ஆலோசகராக நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *