இலங்கை இராஜாங்க அமைச்சர் வாகன விபத்தில் பலி!

இன்று அதிகாலை கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மூவர் ராகம வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இராஜாங்க அமைச்சரும் மற்றுமொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *