அரசுக்குக்கு சொந்தமான வகையில் வாகன இறக்குமதி
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் புதிய வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், கல்வி அமைச்சுக்கு 2 பேருந்துகளும், சுகாதார அமைச்சுக்கு 21 வண்டிகளும், நடமாடும் மகப்பேறு கிளினிக்கிற்கு 3 வாகனங்களும், தொழிலாளர் அமைச்சுக்கு 1 வாகனமும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு 3 பயணிகள் பேருந்து மாத்திரமே இதன் மூலம் கொண்டுவரப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவை அனைத்தும் வெளிநாட்டு உதவியின் அடிப்படையிலேயே இந்த நாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மாத்திரமே அது தொடர்பான இறக்குமதி நடவடிக்கைகளை தனது சொந்தப் பணத்தில் மேற்கொள்ளும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.