மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்

மாலம்பே, கஹந்தோட்டை பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த பெண் 35 வயதுடையவர் எனவும், உயிரிழந்த மூன்று பிள்ளைகளில் இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

07, 08 மற்றும்  09 வயதுடைய பிள்ளைகளே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *