ஜனவரி முதல் பாரியளவில் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை!

 

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 420 ரூபாவை தாண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெஹான் சேமசிங்க வெளியிட்ட அறிவிப்பு
அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோலுக்கு VAT விதிக்கப்படும் என ஷெஹான் சேமசிங்க சபையில் தெரிவித்தார்.

அப்படியென்றால் உங்களிடமிருந்து நான் அறிய விரும்புகிறேன்’ என நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எவ்வித பதிலையும் வழங்காமல் சிரித்துக்கொண்டார்.

‘அப்படியானால், அது இருக்கும் என்று நான் கருதுகிறேன். இதன்படி ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் லீட்டருக்கு 420 ரூபாவாக அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்’ என ஜெயசுமண தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *