மோடிக்கு மைத்திரி கைலாகு கொடுத்து வாழ்த்துத் தெரிவிப்பு!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவம் புதுடில்லியில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாகவும் அந்த நாட்டுப் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைலாகு கொடுத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.