கடிச்ச கட்டுவிரியனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்
ஒரு பெண் தன்னை கடித்த பாம்பை கொன்று உடலை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் அத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகுராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.
அப்போது பாம்பு கடித்து கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் சரணவன் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
தற்போது அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.