இஸ்ரேல் போரில் நவீன ஏவுகணைகளால் தாக்கும் ஹிஸ்புல்லா
இஸ்ரேல் மீது நவீனரக ஏவுகணையை பயன்படுத்தி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் படைத்துறை தெரிவித்துள்ளது.
லெபனானில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலை அடுத்து இன்று சனிக்கிழமை தாமும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிலைகள் மீது ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் படைத்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.