தமிழ் விக்ரமசிங்கவாக மாறிய ரணில் விக்ரமசிங்க:உருவானது புதிய சர்ச்சை
இலங்கை பிரதமரின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில் கவனக்குறைவால் ஜனாதிபதியின் பெயரில் ஏற்பட்ட பிழையின் காரணமாக புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதற்கு பதிலாக ஜனாதிபதி தமிழ் விக்ரமசிங்க (President Tamil Wickremesinghe) என எழுதப்பட்டிருந்தமையே அதற்கு காரணமாகும்.
கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதியிட்ட பிரதமரின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ரீட் மாவத்தை றோயல் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா தொடர்பான செய்தியில் ஜனாதிபதியின் பெயர் தவறாக பிரசுரிக்கப்பட்டது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றிய குழு!
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றிய குழு!
இந்நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரேமஜந்த, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், இரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, சி.பி.விக்னேஸ்வரன், அதிபர் கவிதா ஜயவர்தன மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
எவ்வாறாயினும், ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்கவிற்கு அறிவித்ததையடுத்து அதிபரின் பெயர் திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.