காசாவுக்கான உணவு போதுமானதாக இல்லை – உலக உணவுத் திட்டம் தெரிவிப்பு

காசா பகுதிக்கான உணவுப் பொருட்கள் போதுமானதாக இல்லை என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உதவிகளை ஏற்றிச் செல்லும் மேலும் 40 கொள்கலன்கள் காசா பகுதிக்குள் பிரவேசிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, காசா பகுதியில் உள்ள ஒரு மில்லியன் மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க சுமார் 40 கொள்கலன்களில் உதவி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், காசாவில் உள்ள 2 மில்லியன் மக்களுக்கு உணவை வழங்குவதற்கு நாளொன்றுக்கு சுமார் 100 கொள்கலன்கள் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, ஹமாஸ் அமைப்பு தம்மிடமுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு மற்றுமொரு முன்மொழிவை முன்வைத்துள்ளது.

இதன்படி, இஸ்ரேலின் காவலில் உள்ள ஹமாஸ் கைதிகளுக்கு ஏற்ப பயணயக்கைதிகளை மாற்றுவதற்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இஸ்ரேல் இதுவரை பதில் அளிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இஸ்ரேல் – பலஸ்தீன் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 10,000 ஐ அண்மித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 8,000 பேர் காசா பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *