5 ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை!
உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், 5 ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை” என மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துத்துள்ளார்.
திபியபுரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவத்துள்ளார்.
இதுகுறித்து அவர்மேலும் தெரிவிக்கையில் ”வருகின்ற மார்ச் மாதம் 10 ஆம் திகதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் போது பாஜக வெற்றி பெற்றால் 18 ஆம் திகதி ஹோலி பண்டிகையின் போது இலவச எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில், 3வது கட்ட வாக்குப்பதிவு வருகிற 20 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.