அதிக சொத்துகள் வைத்திருப்பவர்களுக்கு புதிய வரிகள் அறிமுகம்
2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முன்மொழிவில், சொத்து வரி அல்லது பரம்பரை வரி மீதான சொத்து வரியை கொண்டு வர அரசாங்கம் தயாராகி வருகிறது.
ஒருவருக்குச் சொந்தமான சொத்துகளின் அளவை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப வரி விதிப்பதே இந்தப் புதிய வரியின் நோக்கமாகும்.
இந்த வரியில் சொத்துகள், வங்கி வைப்பு, அசையா சொத்து, காப்பீடு, ஓய்வூதியம், வணிக உரிமை மற்றும் நிதிப் பத்திரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட சொத்துகளின் முழு மதிப்பும் அடங்கும்.
தற்போது அரசாங்கத்தின் வரி வருமானம் குறைவடைந்துள்ளதால் இந்த வரியை எதிர்வரும் வருடம் முதல் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வீடு, வாகனம், சிறிய காணி போன்ற அடிப்படை சொத்துக்களை தவிர்த்து ஒருவர் சம்பாதித்த பிற கூடுதல் சொத்துக்களுக்கு இந்த வரிகளை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.