வீதி விபத்துகளினால் ஒவ்வொரு ஆண்டும் 150 சிறுவர்கள் உயிரிழப்பு
வீதி விபத்துகளினால் ஆண்டுதோறும் சுமார் 150 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கவனக்குறைவு, மதுபோதை, வீதி விதிமுறைகளை பின்பற்றாமை உள்ளிட்ட காரணங்களினால் இவ்வாறு விபத்துகள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வீதி விபத்துகளினால் நாளொன்றுக்கு ஆறு பேர் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு நான்கு மணிநேரத்திற்கு ஒருவர் உயிரிழப்பத்துடன், மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாவதாகவும் மேலும் நான்கு பேருக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2020 ஆம் ஆண்டில் வீதி விபத்துகளினால் 2363 பேர் உயிரிழந்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் 2513 பேரும், 2022 ஆம் ஆண்டில் 2115 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த ஆண்டின் கடந்த 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்துகளில்நாள் 1800 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே குறைந்தது 10 வீதமான இறப்புகள் ஏற்படுகின்றன.
கடந்த வருடம் மாத்திரம் 18 வயதுக்குட்பட்ட 129 சிறுவர்கள் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த வருடம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 18 வயதுக்குட்பட்ட 115 சிறுவர்கள் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸாரின் தரவுகள் தெரிவிக்கின்றன.