அரசாங்கத்தில் இருந்து வெளியேற விமலுக்கு நிமல் கோரிக்கை!

அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு எதிரணியின் வேலையை செய்ய முடியாது. எனவே, அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிரணியில் அமர்ந்து அதற்கான பணியை முன்னெடுக்கலாம் – என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விமல்வீரவன்சவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தை எதிர்ப்பதற்கு அமைச்சரவை , ஆளுங்கட்சி கூட்டங்கள் இருக்கின்றன. அவற்றைவிடுத்து வெளியில் வந்து விமர்சிப்பதை ஏற்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்வதானால் அரசாங்கத்திலிருந்து வெளியேறி, எதிரணியில் அமர்ந்து செயற்படுவதே சிறப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *