மில்கோ நிறுவனத்தின் ஊழியர்கள் 13 பேர் கைது
மில்கோ தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் 13 பேர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மில்கோ நிறுவனத்தில் தலைவர் ரேணுக பெரேரா தடுத்துவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரேணுக பெரேரா மில்கோ நிறுவனத்தின் தலைமையகத்தில் ஊழியர்களினால் தடுத்துவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பொலிஸாரின் தலையீட்டில் ரேணுக பெரேரா விடுவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி.துஷ்மந்தவின் பணிப்புரையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.