ஊடகவியலாளரின் மனைவி ,பிள்ளைகள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி
அல்-ஜசீரா ஊடக வலையமைப்பு, அதன் காசா நிருபரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் காசாவின் மையத்தில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Wael Al-Dahdouh தனது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோரின் உடல்களை மருத்துவமனையில் வைத்திருக்கும் நேரடி காட்சியில் தோன்றினார்
காசா பகுதியில் உள்ள Nuseirat அகதிகள் முகாமில் நடந்த தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அல்-ஜசீரா தெரிவித்தது.